"அரசு ஆம்புலன்ஸில், ஜி.பி.எஸ் கருவி" தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தல்

0 1406
அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதை தடுக்க, ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதை தடுக்க, ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்குமாறு தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து மாவட்டங்களிலும் போதுமான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்தனர்.

மேலும், உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் எப்போது வான்வழி ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசுக்கு அவர்கள் கேள்வி எழுப்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments